9 Jan 2017

ஜனாதிபதியின் நீண்ட ஆயுளுக்கான ஆசிவேண்டி களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் விசேட பூஜை

SHARE
ஜனாதிபதியின் நீண்ட ஆயுளுக்கான ஆசிவேண்டியும், நல்லாட்சி அரசினால் முன்  எடுக்கின்ற  அனைத்து நடவடிக்கைளும் வெற்றியடைய வேண்டியும் நேற்று களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் விசேட பூஜை இடம் பெற்றது.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று மூன்றாவது ஆண்டு மலர்வினை முன்னிட்டு குறித்த விசேட பூஜை நிகழ்வு  வைத்திய அத்தியட்சகரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது ஜனாதிபதி அவர்களின் பெயரில்  ஆலயத்தில் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
  
 கௌரவ ஜனாதிபதி அவர்கள் எதிர் வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி குறித்த வைத்தியசாலையை திறந்து வைக்க வரவுள்ளார.; இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது. திறப்புவிழா ஏற்பாடுகள் தொடர்பில் அண்மையில்; சுகாதார அமைச்சர் உட்பட ஏனைய சுகாதார துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தில் கிழக்கு முதலமைச்சர் தலைமையில நடைபெற்றது. இதில் வைத்திய அத்தியட்சகர் வைத்திய நிபுணர்கள் நியமனம் தொடர்பில் பிரஸ்தாபித்தார்.
    
ஜனாதிபதியின் வருகையின் பின்னர் எமது வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர்கள் தொடர்பான குறைபாடு மற்றும் ஏனைய குறைபாடுகள் அனைத்தும் ஜனாதிபதி வருகையின் பின்னர் நிவர்த்தி செய்யப்பட்டு வைத்திய துறையிலே பட்டிருப்பு தொகுதிமக்களின் மைத்திய நிலையமாக விளக்கும் இவ் வைத்தியசாலை  சிறந்த சேவையாற்றவும் இறைவனைப் பிரார்த்திபதாக வைத்திய அத்திட்சகர் ஜீ.சுகுணன் இதன் போது தெரிவித்தார்






SHARE

Author: verified_user

0 Comments: