2 Jan 2017

செங்கலடி எல்லை நகரில் கைக்குண்டு மீட்பு

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி எல்லை நகரில் கிராமத்தில் வீட்டுத் தோட்டமொன்றில் திங்கட்கிழமை (02.01.2017) கைக்குண்டொன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

எல்லை நகர் கிராமத்திலுள்ள சிறிய வீட்டுத் தோட்டத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது இக் கைக்குண்டு தென்பட்டுள்ளது. உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதுபற்றி தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்ததாகத் தெரிவித்த பொலிஸார் இது யுத்த காலத்தில் புழக்கத்தில் இருந்த பழைய குண்டாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இது சம்பந்மான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: