(க.விஜி)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட துறை நீலாவணை பிரதான வீதியின் இரு மருங்கிலும் கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக துறைநீலாவணைக் கிராம மக்களும் பிரயாணிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மீக நீண்டகாலமாக இருந்து வரும் இப்பிரச்சனைக்கு இதுவரையில் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை, செவ்வாய்கிக் கிழமை (10) அதிகாலையும் இவ்வாறு கோழிக் கழிவுகள் வீசப்பட்டுள்ளதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு பயணிக்க வேண்டியுள்ளதாக பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட துறை நீலாவணை பிரதான வீதியின் இரு மருங்கிலும் கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக துறைநீலாவணைக் கிராம மக்களும் பிரயாணிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மருதமுனைப் பிரதேசத்திலுள்ள கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் கடைகளிலிருந்தே கழிவுகள் மூட்டை, மூட்டையாக இரவு வேளைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் இவ்வாறு வீதியருகில் கொட்டப்பட்டு வருவதாகவும் துறைநீலாவணைக் கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த பிரச்சனை மிக நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இதனால் பிரயாணிகள் மாத்திரமின்றி, கழிவுகளை கோயில் மற்றும் குடிநீர் கிணறுகளுக்குள்ளும் காகங்கள் எடுத்துக் கொண்டு போடுகின்றன.
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து வரும் கழிவுகளே சட்டவிரேதமான முறையில் பொதுமக்களால் இப்பகுதியில் போடப்படுகின்றன. இவ்விடையம் தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளருக்கு எழுத்து மூலம் என்னால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிதுகாலம் இப்பகுதியில் யாரும் கழிவுகளைக் கொட்டவில்லை ஆனால் தற்போது மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்விடையம் குறித்து மீண்டும் கால்முனை மாநகர ஆணையாளருக்கும், சுற்றுச் சூழல் பிரிவுக்கும், அறிவித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரனிடம் செவ்வாய்க்கிழமை (10) தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment