24 Dec 2016

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் ஒளி விழாக் கொண்டாட்டம்

SHARE
புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இம்முறை ஒளி விழா 22 ம  திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வு பயிற்சிபெறும் பயிலுனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. தாழங்குடா தேவாலய பங்குத் தந்தை J.A.G.இரத்தினகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சமூக நலன்புரி அமைப்பு மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் சேவையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த பங்குத் தந்தை J.A.G.இரத்தினகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் நத்தர் தின கொண்டாட்டங்கள் கிருஸ்தவர்கள் மட்டுமே கொண்டாடாமல் ஏனையோரும் கொண்டாட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், அதனால் தங்கள் நிகழ்வுகளுக்கு ஏனைய மதத் தலைவர்களை அழைப்பது என்றும், ஆனால் இங்கு முற்றிலும் மாறுபட்டு குறைந்த வீதத்தில் கிருஸ்தவர்கள் பயிலும் இந்த கல்லூரியில் இந் நிகழ்வினை ஏற்பாடு பண்ணியிருப்பது பாராட்டத்தக்கது என்றும், தான் இந் நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்த சந்தர்ப்பம் மிகவும் மகிழ்ச்சிகரமாக விடயம் எனவும் தெரிவித்தார்.

ஒளி விழாவின் பின்னர் ஆண்டு இறுதி கொண்டாட்டமாக பயிற்சிபெறும் மாணவர்களின் நகைச்சுவையினூடான கருத்தாழம் மிக்க நாடகங்கள், பாடல், நடனம், போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.







SHARE

Author: verified_user

0 Comments: