24 Dec 2016

எமது எதிர்கால சந்ததியினரை தேக ஆரோக்கிய முள்ளவர்களாக உருவாக்க வேண்டும் - குபேரன்

SHARE
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் 3.5 லெட்சம் ரூபாய் செலவில் 300 வசதிகுறைந்த பேசாக்கற்ற கற்பிணித் தாய்மாருக்கு இலவச போசாக்கான பால்மா பொதிகளை வினியோகம் செய்துள்ளோம். என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் 3.5 லெட்சம் ரூபாய் செலவில் பேசாக்கற்ற மற்றும் வசதிகுறைந்த கற்பிணித் தாய்மாருக்கு இலவச போசாக்கான பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (24) களுவாஞ்சிகுடி பொதுசுகாதார வைத்திய அலுவவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு பால்மா பொதிகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் இதன்போது தெரிவிக்கையில்….

போசாக்கான பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கருவில்தான் ஜனாதிபதி அவர்களும் செயற்பட்டு வருகின்றார். எனவே இப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதேச சபை என்ற ரீதியில் நாங்களும், இப்பிரதேச மக்களுக்குப் பணி செய்து வருகின்றதோடு , எமது எதிர்கால சந்ததியினரை நல்ல பிரஜைகளாக தேக ஆரோக்கியமுள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் எமது பிரதே சபை நிதியிலிருந்து இவ்வாறான உதவிகளைச் செய்து வருகின்றோம். எனவே தாய்மார்கள் போசாக்கான குழந்தைகளைப் பெற்று நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த களுவாஞ்சிகுடி பொது சுகாராத வைத்திய அதிகாரி கே.கிருஸ்ணகுமார்…

நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்று ஊட்டச்சத்து மிகுந்த பிள்ளைகளை வளர்த்தெடுத்தால்தான் பிள்ளைகள் ஆரோக்கியமாகத் திகழ்வார்கள். அவ்வாறெனில்தான் அவர்கள் எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாகவும் உருவாகுவார்கள்.

ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு நாம் வழங்கும் உதவிகள் மாத்திரம் போதாது தொடர்ந்து சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். தற்போது நமது பிரதேசத்தில் கிடைக்கின்ற உணவு வகைகளை தினமும் உட்கொண்டு வந்தால் போசாக்கற்ற நிலமை ஏற்பாடாது. எனவே போசாக்கின்மையைப் போகுவதற்கு எமது பிரதேசத்தில் கிடைக்கக் கூடிய முக்கியமான சத்துணவுகள் போதுமானதாகும். என அவர் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: