வறுமை, வறுமை என்று நாமெல்லாம் சொல்லுகின்றோம் ஆனால் அந்த வறுமையை நாங்கள்தான் விலைகொடுத்து வாங்குகின்றோம். கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது,
காத்தான்குடி, ஏறவூர், ஓட்டமாவடி போன்ற பகுதிகளெல்லாம் முஸ்லிம் மக்கள் வாழும் கிராமங்களாகும், அக்கிராமங்கள் செழிப்புற்று விழங்குகின்றன. இக்கிராமங்கள் வானத்திலிருந்து வந்ததோ மாறாக பூமியிலிருந்து வெடித்து வந்ததோ கிடையாது, அம்மக்கள் உழைக்கின்ற பணத்தில் சேமிப்பு செய்து தற்போது வளர்ந்துள்ளார்கள்.
என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 8.17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 184 சிறு கைத்தொழிலில் ஈடுபடும் பயனாளிகளுக்கு வாழ்வாதர உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சேயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் வியாழக்கிழமை (29) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது 51 மீன்பிடியாளர்களுக்கு வலைகளும், 26 தையல் தொழிலாளர்களுக்கு தையல் இயந்திரங்களும், பனை உற்பத்திப் பொருக்கள் செய்யும் 78 பேருக்கான உபகரணங்களும், சீவல் தொழில் செய்யும் 28 பேருக்கு கயிறு, கத்தி, முட்டி, துவிச்சக்கரவண்டி, உள்ளிட்ட பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்…..
தமிழ் மக்கள் வாழும் கிராமங்களை ஒப்பு நோக்கும்போது கவலையளிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் மது அருந்துபவர்கள் இருக்கின்றார்கள் என்ற நோக்கோடு வெளிஇடங்களிலிருந்து வருபவர்கள் இங்கு மதுபானசலைகளை சட்டரீதியாகத் திறக்கின்றார்கள் இதனை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது. எதிர்காலத்தில் இவற்றைத் தடுப்பது தொடர்பில் அரசியல்வாதிகளான நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் முதலில் நாங்கள் திருந்த வேண்டும், வெளியிடங்களிலுள்ளவர்கள் இங்குள்ளவர்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு சென்று அவர்களுடைய பிள்ளைகளை பொறியியலாளர்களாகவும், டாக்டர்களாகவும், உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள். அதற்கு நாம் எமது பணத்தை அவர்களுக்குக் கொடுக்கின்றாம்.
இந்நிலையில் எமது பிள்ளைகளுக்கு நேரத்திற்கு உணவின்றி படிப்புக்கு தகுந்த பாடசாலையின்றி, தடுமாறும் நிலமைதான் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் பாடசாலைகளை அவிருதி செய்ய வேண்டும், வீதிகள் போடவேண்டும், என நான் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு வருகைதரும் தாய்மார்கள் என்னிடம் கோரிக்கை முன்வைப்பதுண்டு மாறாக இவ்வாறு இப்பிரதேச மக்கள் யாரும் என்னிடம் தெரிவிப்பதில்லை. இந்நிலையில்தான் வாழ்வாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.
ஆனால் நான் மதம் இனம் பார்த்து சேவை செய்யவில்லை, மனிதநேயம் பார்துத்தான் சேவை செய்யகின்றேன் மனிதநேயம் மட்டக்களப்பில் வாழவேண்டும். எனவே மக்களின் வாழ்வாதார ரீதியில் முன்னேற்றுவதற்காக நாம் வழங்கும் பொருட்களை மக்கள் ஏனையவர்களுக்கு விற்றுவிடக்கூடாது, அவ்வாறு விற்றால் அது மக்கள் தங்களுக்குத் தாங்களாகவே செய்யும் முதல் துரோகமாகும், அடுத்து அவர்கள் எமக்கு அவர்கள் செய்யும் இரண்டாவது துரோகமாகும்.
உழைக்காமலிருந்து உண்பதற்கு முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் பழகியிருக்கின்றார்கள், இது சுனாமி கற்றுத்தந்த ஒரு பிழையான பாடமாகும். இவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும் நாம் சுயமாக உழைத்து எம்மீது நம்பிக்கை வைத்துச் செய்ய வேண்டும். இவ்வாறு சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் நடைபெறுவதுகிடையாது. மாறாக வீதிகள் போடவேண்டும், போக்குவரத்து ஏற்பாடுகள், மின்சார வசதியில்லை, பாடசாலைகள் புணரமைப்பு வேலைகள் போன்றவற்றைச் செய்யுமாறுதான் சிங்கள மக்கள் கோருவதுண்டு. சிங்கள மக்கள் உழைப்பு ரீதியாக சொந்தக்காலில் நிற்கவேண்டும் என நினைக்கின்றார்கள். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment