10 Nov 2016

பனைமரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 40 மில்லிமீற்றர் குண்டுகள் 3 பொலிஸாரால் மீட்பு

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள  கொம்மாதுறை தீவு பகுதியில் பனை மரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 40 மில்லிமீற்றர் குண்டுகள் மூன்றைத் தகவலொன்றில் பேரில் தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை மாலை (நொவெம்பெர் 09, 2016) ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இந்தக் குண்டுகளை மீட்டுள்ளனர்.

இந்தக் குண்டுகள் பிளாஸ்டிக் கொள்கலன்  ஒன்றினுள் மிகவும் பாதுகாப்பான முறையில் சுற்றப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: