(துறையூர் தாஸன்)
சமூக நல்லுறவுக்கான கலைப் பண்பாட்டுத் திருவிழா - இரண்டாம் நாள் நிகழ்வு
இந்து சமயகலாசாரஅலுவல்கள் திணைக்களமானது சிவஞானம்.ஜெயசங்கர் அவர்களின் எண்ணக்கருவுக்கு ஏற்ப மடை எனும் பாரம்பரியக் கலைகளினதும் கலைஞர்களினதும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த மடை எனும் பெருவிழாவை க்ந்த 2013 ஒக்டோபர் 25,26,27காலப்பகுதியில் ஒழுங்குசெய்திருந்தது.
கலாநிதி சிவஞானம்.ஜெயசங்கர் அவர்களின் மடை எனும் எண்ணக்கருவானது இலங்கையிலுள்ள மக்களின் கலாசாரசங்கமமாக அமைந்தது. அதாவது வேடர் சமூகம், அருந்ததியர் சமூகம், இஸ்லாமிய, குறவர், பறங்கியர் சமூகம் என பன்மைத்தன்மையான நம் பண்பாட்டினை உணரவும் ஒருவரை யொருவர் கௌரவிக்கவும் தங்கள் தங்கள் அனுபவங்களைபரிமாறவும் சேர்ந்து மகிழவும் மடை மூலமாக களமமைத்துக் கொடுத்திருந்தார்.
மடை எனும் பாரம்பரியக் கலைகளின் திருவிழாவில் ஆற்றுகைகள், காட்சிப் படுத்தல்கள், கலந்துரையாடல்கள் என்பனவற்றை ஒழுங்கு செய்து வெகுசிறப்பாக செய்திருந்தனர். பாரம்பரியக் கலைகளினதும் கலைஞர்களினதும் கொண்டாட்டமாக அமைந்த மடை எனும் திருவிழாவின் பிரதான நிகழ்வுகள் அனைத்தும் உப்புவெளி சிவானந்தா தபோவனத்திலும் பாரம்பரிய ஆற்றுகைக் கலைகள் இந்து சமயகலாசார மண்டப வளாகத்திலும், நகரக் கடற்கரையிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதேபோன்று சமூக நல்லுறவுக்கானகலைப் பண்பாட்டுத் திருவிழா இவ்வருடம் 2016 ஒக்டோபர் 27 – 29 வரையானகாலப்பகுதிக்குள் கனகரெத்தினம் விளையாட்டரங்கு, விபுலானந்தா மத்தியகல்லூரி வளாகம், சண்முகாவித்தியாலயம், விபுலானந்தர் மணிமண்டபம் மாளிகைக்காடு பள்ளிவாசல் , மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலயம் போன்றவற்றைகளமாகக் கொண்டு நடைபெற்றன.
தேசிய ஒற்றுமைப் பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் கெயார் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் இவ்வாண்டுகலைகளின் திருவிழாவினை சுவாமிவிபுலானந்தர் அவதரித் தபழம் பதியினைமையமாகக் கொண்டு நடைபெற்றது.
இவ் ஆரம்ப நிகழ்வை தொடக்கிவைப்பதற்காக பிரதம அதிதியாக அமைச்சர் மனோகணேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் த.ஜெயசிங்கம், சுவாமி விபுலானந்தாஅழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் சி.ஜெயசங்கர், கல்விமான்கள், கலைஞர்கள் , பாடசாலை அதிபர்கள் , மாணவர்கள், சமூகநலன் விரும்பிகள், உட்படபலர் இதன்போது பலர் கலந்து சிறப்பித்தனர்.
பண்பாட்டு பவனியில் மாட்டு வண்டில்கள், தழிழர்களின் பாரம்பரிய இசைவாத்தியக் கருவிகளின் இன்னிய அணி, பறையிசை, சிங்கள மக்களின், கண்டியநடனம், வெஸ் நடனம், இஸ்லாமிய இசைமரபானபக்கீர் பைத் என்பன அதிதிகளை மங்களகரமாக வரவேற்றன.
அதனை அடுத்து கனகரெட்னம் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரியக் கலைக் காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவாமிவிபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக கட்புலத் துறை மாணவர்களின் ஓவியக் காட்சிக் கூடமும் விபுலானந்தர் மணி மண்டபத்திலும் திறந்து வைக்கப்பட்டது. இவ் ஓவியக் காட்சிகளுக்கூடாக முழுமையாக மனித உரிமைமீறல்களின் போது உண்மைக்கும், பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்திற்குமான உரிமைக்கான குரலாகவும், கடந்த காலத்தை அங்கீகரிப்பதற்கான அவசியத்தைப் பற்றியும் உண்மையையும் நீதியையும் இழப்பீட்டினையும் மீளநிகழாமையையும் வலியுறுத்துவதாகவுள்ளது.
கனகரெட்னம் விளையாட்டு மைதானத்தில் களுவன்கேணி பிரதேச மக்களின் வேடுவர் கிராம காட்சிப்படுத்தலும் பாரம்பரிய திருமணநடை முறைகளும் , முஸ்லிம் திருமண நடைமுறைகளும் மருதாணி போடுதல் நடைமுறைகளும், சேருவிலமக்களின் பாரம்பரிய உணவுவகைகளும், கைவினைப் பொருட்களும், மட்டக்களப்பு பிரதேசத்தினரின் கைத்தறி ஆடைகள், பறங்கியர் சமூ கஉணவு வகைகள், கன்னங்குடா சமூகத்தினரின் கூத்து உடைகள் என்பனவும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இங்குள்ள அனைத்து காட்சிப்படுத்தல்களும் அறியப்படாத பெரும்பாலான மக்களால் நுகரப்படாத ஆனால் நுகரப்பட வேண்டிய வாழ்வியல் தேவைப்பாடுகளையும் , விளிம்பு நிலைமக்களின் வாழ்வியல் அம்சங்களையும் பிரதிபலிப்பதாயுள்ளது.
சமூக நல்லுறவுக்கும் வலுப்படுத்தலுக்கு மானகலைபண்பாட்டுத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வானது நாட்டுப்புற மரபிசைப் பாடல்கள், விவசாயநடனம் என்பனவற்றைத் தொடர்ந்து பாரம்பரியக் கலைகளுக்கான நிதிஉதவித் திட்டங்கள், தொடர்பூடகங்களும் பாரம்பரியக் கலைகளும், இன்றைய கல்விமுறைகளும் பாரம்பரியக் கலைகளும் எனும் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் அமர்வு விபுலானந்தா மத்தியகல்லூரியின் வெவ்வேறு மண்டபங்களில் வெகுஆழமாகவும் விரிவாகவும் காத்திரமாகவும் ஆராயப்பட்டது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், பாடசாலைமாணவர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் பாரம்பரியக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டபலர் இதன்போதும் கலந்து கொண்டனர்.
அதனை அடுத்து கண்டிய நடனக் கலைஞர்களின் நடன ஆற்றுகையினைத் தொடர்ந்து பாரம்பரியக் கலைகளில் சிறுவர்களின் வகிபங்கு, அரங்கின் புதிய செல்நெறிகளை உருவாக்குவதில் பாரம்பரியக் கலைகளின் பங்களிப்பு, பாரம்பரியக் கலைகளின் வகிபங்கு எனும் தலைப்பின் கீழ் விபுலானந்தா மத்தியகல்லூரியின் வெவ்வேறு மண்டபங்களிலும் காத்திரமாக கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வுகளிலும் பல்கலைக்கழக, மாணவர்கள், பாடசாலைமாணவர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் பாரம்பரியக் கலைஞர்கள், சமூகஆர்வலர்கள் உள்ளிட்டபலர் இதன்போது கலந்துகொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்வின் மாலை நேரஆற்றுகைகள் மாளிகைக்காடு நூர் பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ளn வளியில் கிண்ணியாபிரதேச முஸ்லிம்களின் தற்காப் புபாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களான சீனடி, சிலம்படி, வாள்வீச்சு, தீப்பந்தவீச்சு என்பனவும் இறக்காமம் பிரதேச முஸ்லிம்களின் பொல்லடிக் கலையும் இறக்காமம் பிரதேசசிங்கள இனத்தினரின் பாரம்பரியக் கலையான வண்ணமே நடனமும் கோலமநாடகத்தின் ஒருபகுதியும் நடித்துக் காண்பிக்கப்பட்டது. திருக்கோவில் பிரதேச ஸ்ரீ வள்ளிபுரகலைஞர்களின் தப்பு இசை ஆடல் மரபும் மட்டக்களப்பு பிரதேச பறையிசை நடனமரபும் சூரியா பெண்கள் நிலையத்தினரின் பெண்கள் பிரச்சினையினைபேசிய ஒளியை நோக்கி என்ற வீதிநாடகமும் பார்ப்போரை வெகுவாக ஈர்த்திருந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வின் இரவு நேர ஆற்றுகைகளாக களுவன்கேணி பிரதேசமக்களின் வேடுவர் சடங்கும் சடங்குப் பாடல்களும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினரின் வனங்களினதும் உயிர்களினதும் முக்கியத்து வத்தினை வெளிப்படுத்திய நிருத்திய நாடகமும், பட்டிப்பளை பிரதேசச மூகமக்களின் வாழ்வியல் பாடல்களான தாலாட்டு, குரவை, ஒப்பாரி, விவசாய, மீனவப் பாடல்கள் என்பனவும், முனைக்காடு பிரதேசத்தினரின் சமகால விடயங்களை வெளிப்படுத்திய போதையற்ற உலகம் எனும் தொனிப்பொருளை வெளிக்கொணர்ந்த வீதிநாடகமும் கனகரெட்னாவிளையாட்டு மைதானத்தில் நடந்தேறியது.
அடுத்தகளமான சண்முகா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் குறுந்திரைப்படக் காட்சியும் சண்முகாமகா வித்தியாலய மைதான வளாகத்தில் வாகரைப் பிரதேசத்தினரின் ஏழாம் போர் வடமோடிக்கூத்தும் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலையாற்றுகை பண்பாட்டின் ஊடாக ஆரோக்கிய மானநல்லிணக்கத்தை பேசுதல் எனும் கருப்பொருளில் சமூக நல்லுறவுகளுக்கான கலைபண்பாட்டுத் திருவிழாவில் பன்மைத் தன்மையான சமூகங்களின் விளிம்பு நிலைமக்களின் பாரம்பரிய ஆற்றுகை நிகழ்வுகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களது முக்கியத்துவத்தினையும், அவர்களுக்கான அங்கீகாரத்தினையும் ஒரேதள அரங்கில் ஒருவருக்கொருவர் அறியக்கூடியதாகவும் வாழ்தலுக்கான இருப்பின் முக்கியத்துவத்தினையும் பலசமூகங்கள் முன்னிலையில் அவர்களது அடையாளங்களை அவர்களே அறியுமளவுக்குகளம் அனைத்துக் கொடுப்பதாக இருந்தது.
இனம், மதம், வர்க்கம், மொழி, பிரதேசம் கடந்து ஒருவரையொருவர் தங்கள் தங்கள் ஆற்றுகைக் கலைகளின் இருப்பியலின் முக்கியத்து வத்தினையும் அதனை அவ் அவ் ஆற்றுகைக் களத்தினிலே மேடையேற்றப்படுவதே அதனது தனித்துவம் என்பதனை கலையாற்றுகைகளுக்கூடாகவும் கலைஞர்களுக்கூடாகவும் யாவரும் புரிந்துகொள்வதற்கான களமுமாக அமைந்திருந்தது.
கலைகளை தொடர் செயற்பாடாகவும் தொடர் செயல் வாதமாகவும் முன்னெடுத்து வருகின்றவாழ்வியலுக்கான கலைச் செயற்பாட்டாளர்களே கலைத் திருவிழாவினை நடாத்திவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment