“அஷ்ரஃப் எனும் மா மனிதரின் அரசியல் போராட்டத்தில் அவருடன் கழித்த நாட்களை எண்ணிப்பார்க்கும்போது, அது அலாதியான சுகானுபவமாக இருக்கிறது. அதற்கு, இந்த அவையில் அமர்ந்து இருக்கும் அவரது சகவாசம் வாய்க்கப்பெற்ற நூற்றுக்கணக்கானோர் சாட்சியாக இருக்கிறார்கள்”.
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சியின் ஸ்தாபகத் தவைர் மர்ஹ_ம் எம்.எச்எம். அஷ்ரஃபின் 16 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) மாலை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றபோது உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
அந்த அபூர்வ மனிதரின் உன்னதமான அரசியல் பயணத்தில் எதிர் நோக்கிய சவால்கள், மற்றும் இந்த நாட்டின் அனைத்து இனங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்தமை, அவர்களிடம் இருந்து பெற்ற நல்லாசிகள் என் ஏராளமாக உள்ளன.
ஆல மரத்துக்குக் கீழ் வேறெந்த மரமும் வளரமுடியாது எனக் கூறுவார்கள். அதற்கு விவிரக்காக அஷ்ரஃப் எனும் ஆல மரத்தின் கீழ், பரந்து விரிந்த கிளைகள், விழுதுகள் என்பவற்றுக்கு மத்தியில் பல்வேறு புதிய தலைமைத்துவங்களை அவர் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
அத்தகைய தலைவரின் இயக்கத்தில் இருப்பவர்கள், இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள், பிரிந்து சென்று மீண்டும் வந்தவர்கள், இன்னமும் பிரியக் காத்திருப்பவர்கள் என்ற நீண்ட பட்டியல் காணப்படுகின்றது.
மறைந்த எமது அரும் பெருந் தலைவருக்கு நாம் ஆற்றக்கூடிய நன்றிக்கடன் எதுவாக இருக்கும் என நாம் ஆழமாக நோக்கினோம். அத்தகைய தலைவரை நினைவுகூர்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருளிய அல் குர்ஆனை ஆராய்தறிவதே சிறந்த வழி என கருதினோம். அதனைவிட சிறந்த வேறெந்த வழியும் இருக்க முடியாது என்ற நம்பிக்கையுடனேயே இந்த நிகழ்வை நாம் நடத்திக்nhண்டிருக்கின்றோம.
இதன் தொடர்ச்சியாக இறைவன் நாடினால் அடுத்த ஆண்டில் இதே மாதம் 16ஆம் திகதியில் இருந்துஇரு தினங்கள் இதே அஷ்ரஃப், அல் குர்ஆன் ஆய்வகத்தின் ஊடாக சர்வதேச அல் குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். அத்துடன் அன்னாரின் ஆன்ம ஈடேற்றத்திற்காக பல்வேறு நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் கட்டார் பல்கலைக்கழக பேராசிரியர் தீன் முஹம்மத் நிவைவுப் பேருரை நிகழ்த்தினார். ஜோர்டான் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த பிரபல காரி அப்துல் றஹ்மான் முஹம்மத் அலி ஜாபிர் மற்றும் அஷ்ரஃப், அல்குர்ஆன் ஆய்வகம் நடத்திய கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்ற காரிகளும் காரியாக்களும் அழகிய தொனியில் அல்குர்ஆனை ஓதினர்.
கிராஅத் போட்டிகளில் வெற்றிபெற்ற காரிகளுக்கும் காரியாக்களுக்கும் தங்கப் பதக்கங்களும், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment