மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் 6 வது சாரணர் பயிற்சிப் பாசறை சனிக்கிழமை
திக்கோடைக் கிராமத்தில் (17) ஆரம்பமாகி திங்கட் கிழமை (19) மாலையுடன் நிறைவு பெற்றது.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்ததோடு, கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தலைமைத்துவம், முதலுதவி, சமயல், சுகாதார பழக்கவழக்கங்கள், நேர முகாமைத்துவம், உள்ளிட்ட பல விடையங்கள் இதன்போது மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாகவும், இதனால் எதிர்காலத்தில் சிறந்ததொரு சாரண மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இப்பயிற்சிப்பாசறை நிகழ்வு அமைந்திருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட உதவி சாரண ஆணையாளர் (ஊடகம்) ஆ.புட்கரன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment