மாற்றுத்திறனாளிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது பிள்ளைகள் போன்றோருக்கு உதவி செய்யும் நோக்கிலான மனிதநேய காப்பம் பட்டிப்பளையில் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.
புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் 28வருடங்களாக வடக்கு, கிழக்கு மக்களுக்காக சேவை செய்யும் இக்காப்பகம் மட்டக்களப்பில் இரண்டு வருடங்களாக சேவையை முன்னெடுத்து வருவதுடன் பட்டிப்பளைப்பிரதேசத்தில் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பட்டிப்பளைப் பிரதேச மனிதநேய காப்பகத்தின் முதல் உதவியாக மருத்துவ சிகிச்சைக்காக மாணவி ஒருவருக்கு ஒரு தொகை பணம் நேற்றைய நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
காப்பத்தின் தலைவர் டொக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காப்பகத்தின் நிருவாகத்தினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment