கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை கிராமத்தில் பாம்பு தீண்டி 13வயது சிறுமி மரணித்த சம்பவம்
ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
ஆறுமுகம், கோமளவல்லி ஆகியோரின் புதல்வியான றேணுகாக என்ற சிறுமியே இவ்வாறு அதிகாலை வேளையில் மரணமடைந்துள்ளார்.
மரணித்த சிறுமியின் குடும்பத்தினருக்கு கொக்கட்டிச்சோலை சமூர்த்தி வலயப்பிரிவினால் சிறுமியின் இறுதிகிரியைகள் திங்கட்கிழமை (08) காலை நடைபெறுவதற்கு முன்பு உதவிகொடுப்பனவு வழங்கப்பட்டது.
இதனை தலைமையக முகாமையாளர், இ.குணரெட்ணம், வலய முகாமையாளர் பா.துரைராசசிங்கம், வலய உதவியாளர் ஆ.கோடிஸ்வரன் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment