31 Jul 2016

வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

SHARE
 மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (ஜுலை 31, 2016) இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு அதன் சாரதி படுகாயங்களுக்குள்ளானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி கலாச்சார மண்டபத்திற்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற காத்தான்குடி நகர பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. அப்துல் லத்தீப் (வயது - 53) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியின் நடுவிலுள்ள கொங்கிறீற் கட்டில் மோதியதில் முச்சக்கரவண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: