24 Jun 2016

உலகிலே உள்ள 63 இந்து நாடுகளுக்கு விஜயம் செய்து இந்து சமயத்தைப் போதித்தவர் சுவாமி ஸ்ரீமத் தந்திரதேவா

SHARE
அமெரிக்காவின் பென்சேலியம் மானிலத்திலே பிறந்து இந்து மதத்தின் மறுபிறப்புக் கோட்பாட்டுத் தத்துவத்தினை ஏற்று இந்தியாவின் சிதம்பரம், திருச்சென்தூர், போன்ற இடங்களுக்குச் சென்று, யோகாசனம், தியானம், போன்ற பல வற்றைக் கற்று, இந்துத்துத் துறவியாகவே வாழ்ந்து 1983 ஆம் ஆண்டு, இலங்கைக்கு
வருகைதந்து கோணேச பதியின் சாம்பல்த்தீவிலே குடியிருந்து இலங்கையில் மாத்திரமல்ல உலகிலே உள்ள 63 இந்து நாடுகளுக்கு விஜயம் செய்து இந்து சமயத்தைப் போதித்தவர்தான் சுவாமி ஸ்ரீமத் தந்திரதேவா அவர்கள்.

என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு சமாதியடைந்த அமெரிக்க நாட்டு இந்து மதத்துறவி சுவாமி ஸ்ரீமத் தந்திரதேவாவின் நினைவு நாளை முன்னிட்டு, மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள உருவச் சிலைக்கு வியாழக் கிழமை (23)  மலர் மாலை அணிவித்து பூஜை செய்த பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

கடந்த 2008.06.23 ஆம் திகதி அன்று அவர் சமாதி அடைந்தார். அவரது சிருவுருவச் சிலையை மட்டக்களப்பு நகரிலே அமைந்துள்ளோம். இந்நாளை முன்னிட்டு நாம் இன்று அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து பூஜை செய்து அவரது சமயப் பணியை நினைவு கூர்துள்ளோம்.

உலகத்தில் அதிகளவு இந்து மக்களைச் சந்தித்தவரும், இந்துக் கிராமங்களுக்குச் சென்ற பெருமையும், சமாதியடைந்த சுவாமி ஸ்ரீமத் தந்திரதேவா சுவாமி அவர்களையே சாரும். அவர் அவருடைய சொத்துக்கள் அத்தனையும் பிரயோகித்து இந்து சமயத்துக்காக அர்ப்பணித்துள்ளார். அவர் ஆன்மீக ரீதியாக ஆற்றிய பணியினை நினைவு கூர்வதோடு அவற்றை மறக்க முடியாது.

சுவாமி ஸ்ரீமத் தந்திரதேவாவின் பெயரால் நாம் தற்போதும் பல நற்பணிகளை எமது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக மேற்கொண்டு வருகின்றோம், என அவர் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: