19 May 2016

முள்ளிவாய்க்காலில உயிர் நீர்த்தவர்களுக்கு ஆத்தமா சாந்தி வேண்டி மட்டு.வாழைச்சேனையில் விசேட பிரார்த்தனை

SHARE
வாழைச்சேனை பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்காலில் உயிர் நீர்த்த தமிழ் உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி புதன்கிழமை மாலை விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், கட்சி உறுப்பினர்கள், உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆலய குரு சிவஸ்ரீ.எஸ்.தயானந்த சர்மாவினால் விஷேட அபிஷேகப் பூசைகள் என்பன இடம்பெற்றதுடன், ஆலயத்தில் உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.

இங்கு கலந்து கொண்டவர்களால் ஈகச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றன.












SHARE

Author: verified_user

0 Comments: