19 May 2016

கிரான் பிரதேச செயலகத்துக்குச் செல்லும் வீதி தொடர்ந்தும் வெள்ளத்தில்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்துக்குச் செல்லும் வீதி தொடர்ந்தும் புதன்கிழமை (17.05.2016)வரை மூன்றாவது நாளாக நீரில் மூழ்கியுள்ளது.
எனினும் நகரப் புறத்திலிருந்து பிரதேச செயலகம் மற்றும் அந்தப் பிரதேச கிராமங்களுக்குச் செல்லும் அலுவலர்களும் பொதுமக்களும் மாணவர்களும் கிரான் பிரதேச செயலகத்திற்குள் உள்ளடங்கும் கிராமங்கிளிலிருந்து நகரப் புறங்களுக்கு வருவோரும் உழவு இயந்திரங்கள், மற்றும் சற்று உயரமான இன்னபிற வாகனங்களிலேயே மூழ்கிய வீதியினூடாகப் பயணம் செய்கின்றனர்.

கிரான் பாலத்தடியிலிருந்து கிரான் பிரதேச செயலகம் செல்லும் கிறவல் வீதி மழை வெள்ள காலங்களில் வழமையாகவே நீரில் மூழ்கி சேதமடைந்து விடுவதனால் பயணிகள் பெருஞ்சிரமப்பட்டே அந்தப் பகுதியூடாகப் போக்குவரத்துச் செய்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: