(இ.சுதா)
இ.சுதா,கல்வி அமைச்சின் சுற்று நிருபங்களுக்கு அமைவாக ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மூவின மாணவர்களையும் மகிழ்ச்சி படுத்தும் வகையில் புத்தாண்டு விழா வயாழக் கிழமை (07) சகல அரச பாடசாலைகளிலும் நடைபெற்றன. இதே வேளை மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரிய கல்லாறு
உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் புத்தாண்டு விழா வியாழக்கிழமை வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயம், பெரிய கல்லாறு விநாயக வித்தியாலயம், பெரிய கல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயம், மற்றும், உதயபுரம் தமிழ் வித்தியாலயம், ஆகிய நான்கு பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மூவின மாணவர்;களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் கலாசார விளையாட்டுக்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment