6 Apr 2016

களுதாவளையைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியைக் காணவில்லை

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை முதலாம் பிரிவு பொன்னையார் வீதியைச் சேர்ந்த யோகராசா ஜினிந்தா என்ற 19 வயதுடைய யுவதி கடந்த 20.03.2016 அன்றிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தாய் யோகராசா நேசராணி புதன் கிழமை (06) தெரிவித்துள்ளார்.


இவ்விடையம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்….

நானும் எனது கணவரும், எனது மகளுமாக மூவரும்தான் எமது வீட்டிலிருந்து வசித்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த 20.03.2016 அன்று காலை 9 மணியளவில் களுவாஞ்சிகுடி சந்தைக்குச் சென்றவர் இதுவரையில் வீடுதிரும்பவில்லை. அன்றிலிருந்து இன்று வரைக்கும் பல இடங்களுக்கும் சென்று தேடி வருகின்றோம் இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

எனது மகள் காணாமல் போன விடையம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 24.03.2016 அன்று முறைப்பாடு செய்துள்ளோம், எனது மகளை யாராவது கண்டால் 0750 2727 98 என்ற எனது கைத்தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் யோகராசா ஜினிந்தாவின் தாய் நேசராணி தெரிவிக்கின்றார்.

மேற்படி விடையம் தொடர்பில் பொலிஸ் நிலைத்தில் கடந்த 24.03.2016 அன்று முறைப்பாடு தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: