துர்முகி வருடப் பிறப்பை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் வியாழக் கிழமை 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றது.
விசேஷட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்று, கிரியைகள், சங்காபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வந்த பக்தர்கள், வழிபாடுகளில் ஈடுபட்டதனையும், அவதானிக்க முடிந்தது.
இதன்போது, ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ வசந்தன் குருக்கள், மற்றும், சடாச்சரக் குருக்கள் ஆகியோர் கிரியைகளில் ஈடுபடுவதையும், பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதையும், இதன்போது காணலாம்.
0 Comments:
Post a Comment