(இ.சுதா)
அரசியல் மாற்றத்திற்கு அமைவாக ஜனநாயக ரீதியாக முழுமையாக நடைபெற்ற தேர்தலில் கொலை வெறி கொண்ட முன்னாள் ஜனாதிபதி மக்களால் தோக்கடிக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய நடை முறைக்கு அமைவாக ஜனநாயக கோட்பாடுகளை பின்பற்றக் கூடிய நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் எனக் கூறக் கூடிய அரசாங்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கக் கூடிய மைத்திரி பால சிறிசேனவின் முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கது
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் தொடர்பான் பொதுக் கூட்டம் திங்கட்கிழமை பிற்பகல் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதிக் கிளை உறுப்பினர் த.கணேசமூர்த்தி தலைமையில் துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் மட்டு மாவட்ட காணி ஆணையாளர் எஸ்.குருநாதன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்….
ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முன்னர் ஆட்சி செய்த ஏனைய நிறைவேற்று ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகின்ற போது மைத்திரி பால சிறிசேனவின ஊடக அறிக்கைகள் மற்றும் உள்ளாந்த செயற்பாடுகள் மூலமாக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகின்ற தீர்வுத் திட்டம் தொடர்பான உண்மையான நிலைப்பாடு இருக்கின்ற போதிலும் இனவாத மாயைக்குள் பலர் தடுக்கின்ற சந்தர்பத்தில் அவரும் அதனை ஏற்றுக் கொள்கின்றமையினை உணரமுடியும்.
நாடாளுமன்ற நடைமுறையில் தேர்தலில் அதிக ஆசனங்களை பெறுகின்ற கட்சி ஆளும் கட்சியாகவும் இரண்டாம் நிலையில் இருக்கக் கூடிய கட்சி எதிர் கட்சியாகவும் வரமுடியும் இது நாடாளுமன்ற நடைமுறையாகும்.
ஆரம்ப காலங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக ஐக்கிய முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் மாத்திரமே ஆரம்ப காலத்தில் காணப்பட்டன ஆனால் அதன்பிற்பாடு பலகட்சிகள் தோற்றம் பெற்றன.
அண்மையில் திருகோணமலை மாவட்ட முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பிழையான கருத்தினை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளமையினை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் அரசியல் வாதிகள் எப்போதும் சகோதர இனமாகிய முஸ்லீங்களை எதிர்க்க வில்லை வடகிழக்கில் தமிழ் மொழி பேசுகின்ற இரு இனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில்த்தான் எமது தீர்வுத்திட்டம் அமையும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமிi;லை.
தற்போது தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப் பட்டுள்ளது அதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு பற்றி சற்று சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே தமிழ் மக்கள் பேரவையினை உருவாக்கியுள்ளனர். ஒருவர் மூன்று அமைப்புக்களுள் உள்வாங்கப்பட்டு தீர்வுத் திட்டத்தினை முன்வைப்பதனை அரசு ஏற்றுக் கொள்ளாது. எமது தலைவர் இரா.சம்பந்தன் ஐயா மிகவும் மெதுமையாக தனது அரசியல் நகர்வினை மேற்கொண்டு வருகின்றார். அவரின் வழியில் சென்று அரசியல் தீர்வினை பெறமுயுயும். என்பதில் எதுவிதமான சந்தேகமும் இல்லை என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment