27 Feb 2016

மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி ( படங்கள்,வீடியோ)

SHARE
மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித் தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (26) மாலை திருப்பழுகாமம் மைதானத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், பி.இந்திரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், மா.நடராசா, மற்றும், பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான காப்தீபன், ஞானராசா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் ஆகியோர்கள் உட்பட கல்வியியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள, பெற்றோர்கள், என பலரும் கலந்து கொடிருந்தனர்.

இதன்போது சேரன், சோளன், பாண்டியன் ஆகிய 3 இல்லங்களுகிடையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில், 100 மீற்றர், 200 மீற்றர், அஞ்சல் ஓட்டப் போட்டிகள் இடம்பெற்றதோடு, அணிநடை, மற்றும், உடற்பயிற்சிக் கண்காட்சி என்பன இடம்பெற்ற. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அதிதிகளால் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டை குறிப்பிடத்தக்கதாகும்.












































SHARE

Author: verified_user

0 Comments: