2 Jan 2016

துறைநீலாவணை வை.எம்.சி.ஏயின் ஒளி விழா நிகழ்வு

SHARE
(இ.சுதா)

துறைநீலாவணை வை.எம்.சி.ஏ  ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் துறைநீலாவணை கிறிஸ்தவ அமைப்பின் தலைரும் ஓய்வு நிலை நூலகருமான கே.பாக்கியராஜா தலைமையில் மெ.மி.தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் முதன்மைக்குரு ஜெ.டபிள்யு.யோகராசா, துறைநீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் போதகர் அருட்சகோதரி நித்தியகலா வசந்தகுமாரன் உட்பட துறைநீலாவணை ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.மயில்வாகனம் இதில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தலைவர் எம்.இராஜகோபால், அதிபர் கே.மனோகரன், கிராம சேவர்களான தி.கோகுலராஜ், வை.கனகசபை உட்பட பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர்களின் நடனம், கரோல் கீதம் இஇன்னிசை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. 

SHARE

Author: verified_user

0 Comments: