2 Jan 2016

திருமலை மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு நிகழ்வுகள்

SHARE
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2016 ஆம் வருட புத்தாண்டு நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில்  வெள்ளிக்கிழமை (01) நடைபெற்றது.
பிறந்துள்ள இந்நாளில் மக்களுக்கு காத்திரமான பணிகளை செய்வதே தமது நோக்கமாக அமைவதாகவும் இதே போன்றே ஏனைய சகல அரச உத்தியோகத்தர்களும் எவ்வித வேறுபாடுகளுமின்றி மக்கள் சேவை அர்ப்பணிப்புடன் ஆற்ற உறுதிபூண வேண்டும் என்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார கேட்டுக்கொண்டார். 

அத்துடன் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களாக திரகோணமலை மாவட்ட மக்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கு தங்களால் முடியுமான வினைத்திறனான சேவையை வழங்க வேண்டும் என்றும் அரச உத்தியோகத்தர்கள அனைவருக்கும் தமது புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களும் இதன்போது அரசாங்க அதிபர் முன்னிலையில் சேவை தொடர்பான சத்தியப்பிரமானத்தை செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
Trinco New year 2
SHARE

Author: verified_user

0 Comments: