(ஆர்.பி.ரோஸன்)
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களில் 41 பேர் தமிழ் ஊடகவியாளர்கள் 03 பேர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் 03 பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்பில் நீதி விசாரனை ஆரம்பித்தள்ளபோதும் 41 தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரனையும் இன்றுவரை ஆரம்பிக்கப் படவில்லை என யாழ் ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தயாபரன் தெரிவித்தார்.
திருகோணமலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) கல்முனை வை.எம்.சீ.மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களில் 41 பேர் தமிழ் ஊடகவியாளர்கள் 03 பேர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் 03 பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்பில் நீதி விசாரனை ஆரம்பித்தள்ளபோதும் 41 தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரனையும் இன்றுவரை ஆரம்பிக்கப் படவில்லை என யாழ் ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தயாபரன் தெரிவித்தார்.
திருகோணமலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) கல்முனை வை.எம்.சீ.மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்த அவர் உரையாற்றும் போது… தழிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் தாம் கோரிக்கையை முன் வைத்த போது தமிழ் ஊடகவியலாளரின் தலைவர் என்று கூரும் பொறுமைக்குறிய படுகொலை செய்யப்பட்ட சிவராம் அவர்களை யார் என்று பொலிஸ் மா அதிபர் வினவுகிறார்?
அவருடைய வழக்கு இலக்கத்தை கூட அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் இன்று தமிழ் ஊடகவியலானர்களது படுகொலை தொடர்பான விசாரனை காணப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நஸ்ட ஈடு வழங்குவதாக தெரிவித்தள்ளார்.ஆயினும் குறைந்தது 05 தமிழ் ஊடகவியலாளர்களின் நீதி விசாரனையையாவது நீதி மன்றத்திற்கு எடுத்து விசாரனையை ஆரம்பித்தாலேயே நாட்டில் ஊடகப்பணியில் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கை ஒன்று ஏற்படும் எனஅவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment