15 Dec 2015

பிரசாந்தனுக்கு29ஆம் திகதிவரை விளக்கமறியல்

SHARE
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான ஹரனுக்கு எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி என்.என்.அப்துல்லாஹ்  இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பூ.பிரசாந்தன் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.  




SHARE

Author: verified_user

0 Comments: