7 Sept 2015

கல்முனையில் பொதுமக்கள் நடமாடும் சேவை

SHARE
(ஏ.எல்.எம்.சினாஸ்)
பொலிஸ் திணைக்களத்தின் 149 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம் நடாத்திய பொதுமக்கள் நடமாடும் சேவை பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் (07.09.2015) இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஏ.டப்ளியு.ஏ.ஹப்பாரின்  ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்விவுக்கு பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி  ஏ.எம்.சம்சுதீன் தலைமைதாங்கினார். பொதுமகளின் தேவைகளை  குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட்   கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளையும் பொலிஸ் அதிகாரிகள் பெற்றுக்கொடுத்தனர். வைத்தியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட அரச அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: