17 Sept 2015

வெல்லாவெளி சுகாதாரப் பிரிவில் டெங்கொழிப்பு நடவடிக்கை

SHARE
டெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வெல்லாவெளி சுகாதார பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் டெங்கு சம்பந்தமான சேதனை நடவடிக்கை யொன்று புதன் கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கையை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர், மற்றும் பொலிசார், இராணுவத்தினர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிரமசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பத்துக் குழக்களாக பிரிந்து முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது 625 வீடுகள் சோதனை இடப்பட்டதுடன் 10 பேருக்கு எதிராக சிவப்பு நோட்டிஸ் எச்சரிக்கை வழங்கியுள்ளதாக இந்த நடவடிக்கைக்க தலமை தாங்கிய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: