தற்போதையஅரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமாவட்டஅபிவிருத்திக் குழு தலைவர்களைதெரிவுசெய்யும்
சந்தர்ப்பத்தையாழ்ப்பாணம்,வன்னி,மட்டக்களப்புஆகியமாவட்டங்களுக்குவழங்கியுள்ளனர்.
உண்மையிலேமாவட்டஅபிவிருத்திக் குழு தலைவர் பதவிஎன்பதுசிரேஷ்ட பாராளுமன்றஉறுப்பினர்களுக்குவழங்கப்படவேண்டியது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் மாவைசேனாதிராஜாவும்,வன்னியில் சிவசக்திஆனந்தனும்,மட்டக்களப்பில் சீ.யோகேஸ்வரன் என்பவருமேநியமிக்கக் கூடியநிலைஉள்ளது.
இவர்கள் மூவரும் தங்கள் மாவட்டங்களில் முதன்மைநாடாளுமன்றஉறுப்பினர்ளாகதெரிவாகாவிட்டாலும் நீதிநியாயத்தின் படி இவர்களேநியமிக்கப்படவேண்டும். ஆகவேதமிழினத்தின் பெருந்தலைவரும்,எமது இனத்தின் விடுதலைக்காக இராஜதந்திரமுறையில் அரசியல் தீர்வைபெற்றுத் தரும் பாதையில் சென்றுகொண்டிருப்பவரும்,எமதுதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்துதற்போதுஎதிர்கட்சிதலைவராகபதவியேற்று எம் இனத்தைதலைநிமிரவைத்தபெருமகனானமாண்புமிகு இரா.சம்பந்தன் ஐயா இந் நீதி,நியாயங்களையேபின்பற்றி இவ்மாவட்டஅபிவிருத்திக் குழு தலைவர் பதவியைவழங்குவார் எனஎதிர்பார்க்கின்றோம்.
தற்போது, இலங்கைப் நாடாளுமன்றத்திலும்,முதல் இரண்டுபெரும்பாண்மைபெற்றகட்சிகள் அரசாங்கத்தைஅமைத்ததனால் மூன்றாவதுபெரும்பான்மைஆசனம் பெற்றகட்சிக்கேஎதிர்க்கட்சித் தலைவர் பதவிவழங்கப்படவேண்டும் என்றநீதி,நியாயத்தின் அடிப்படையில் சபாநாயகர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்குஎதிர்கட்சிதலைவர் பதவியைவழங்கியுள்ளார்.
அந்தவகையில் சிரேஸ்ட பாராளுமன்றஉறுப்பினர்களுக்கேமாவட்டஅபிவிருத்திக் குழு தலைவர் பதவிவழங்கப்படவேண்டும் எனபுத்தி ஜீவிகளும்,பொதுஅமைப்புக்களும் வேண்டுகோள் விடுப்பதுடன்,வடமாகாணத்தில் எவ்வாறு இந்நியமனம் நடைபெறுகின்றதோஅதேவகையில் கிழக்குமாகாணத்திலும் இந்நியமனம் நடைபெறவேண்டும் எனதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்குவேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment