கிண்ணியாவில் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு தொண்டர்களுக்கான தௌிவுபடுத்தல் செயலமர்வு மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதில் கபே அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.எம். ராபில், பிரதேச அமைப்பாளர் ஆர். மபாஸ் மற்றும் ஊடக செயலாளர் ஏக்கூப் பைஸல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சுநந்தரமானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு பொது மக்களின் கடமைகள் என்ன, தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகளை மீறும் தரப்புகள் தொடர்பில் தகவல்களை எவ்வாறு கண்காணிப்பு குழுவுக்கு பரிமாறுவது போன்ற விடயங்களும் தௌிவுபடுத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment