15 Aug 2015

கள்ளக்காதலனுக்கும் 05 பிள்ளைகளின் தாயுக்கும் விளக்கமறியல்

SHARE
தனது ஐந்து பிள்ளைகளையும் அநாதரவாக கைவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற தாயையும் அவரது கள்ளக்காதலனையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், வியாழக்கிழமை (13) உத்தரவிட்டார். 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அட்டாளைச்சேனை, பாலமுனை-4 ஆம் பிரிவு விளையாட்டு மைதான வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் (27 வயது) தனது 5 பிள்ளைகள் அனாதரவாக கைவிட்டு கள்ளக்காதலனுடன் இரு மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார். 


 தாய் ஒருவர், தனது 5 பிள்ளைகளையும் கைவிட்டு சென்றுள்ளதாகவும் இதனால் பிள்ளைகள் அநாதரவாக இருப்பதாக பொலிஸாருக்கு கடந்த புதன்கிழமை (12) தகவல் கிடைத்ததாகவும் அதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து பாலமுனை பிரதேசத்தில் வைத்து தாயும் பிள்ளைகள் அநாதரவாக்கியத்துக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்து நேற்று மன்றில் ஆஜர்படுத்தினர்.

பிள்ளைகளின் தகப்பன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும் ஐந்து பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கு 12 வயது என்றும் 03 பிள்ளைகள் பாடசாலை செல்வதாகவும் பிள்ளைகள் தாயின் சகோதரனின் வீட்டில் இருப்பதாகவும் 23 
SHARE

Author: verified_user

0 Comments: