மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தினூடாக, தும்பங்கேணி கால்நடை வைத்திய அலுவலகம் இன்று வியாழக் கிழமை காலை (09) போரதீவுப் பற்று பிரதேசத்திலிருந்து முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்ட 3 கால்நடை பண்ணையாளர்களுக்கு தலா ஒவ்வொரு நல்லின இனவிருத்தி எருமைக் காளை மாடுகள் தும்பங்கேணி காலநடை வைத்திய அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
ஒரு காளைமாட்டின் பொறுமதி 18000 ரூபாவாகும், இதில் பயனாளிகளுக்கு அரைவாசி விலைக்கழிவுடன் ஒரு மாடு 9000 ரூகாவுக்கு வழங்கப்பட்டன.
இன்று முதல் தடவையாக இப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 3 கால்நடை பண்ணையாளர்களுக்கு, வழங்கப்பட்ட நல்லின காலைகளைப் போன்று அடுத்த வாரமும், 7 பண்ணையாளர்களுக்கு இவ்வாறான நல்லின இனவிருத்திக் காளைகள் வழங்கப்படவுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம். இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தும்பங்கேணி கால்நடை வைத்திய அதிகாரி கி.ருசியந்தன், கால்நடை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பி.ஜெயந்தன், கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் கி.தமயந்தி, செயலாளர் சு.கோகிலாதேவி, உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment