(வ.சக்திவேல்)
மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 29 ஆம் ஆண்டு நிறைவையிட்டு கலைவிழாவும், பாராட்டு நிகழ்வும் களுமுந்தன்வெளி விநாயகர் கலையரங்கில் ஞாயிற்றுக் கிழமை (28) இரவு நடைபெற்றது.
விநாயகர் கலைக் கழகத்தின் தலைவர், மு.சவுந்தரராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாணசபைபின் பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை உள்ளிட்ட மற்றும் பாடசாலை அதிபர்கள், கலைஞர்கள் பொது மக்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 29 ஆம் ஆண்டு நிறைவையிட்டு கலைவிழாவும், பாராட்டு நிகழ்வும் களுமுந்தன்வெளி விநாயகர் கலையரங்கில் ஞாயிற்றுக் கிழமை (28) இரவு நடைபெற்றது.
விநாயகர் கலைக் கழகத்தின் தலைவர், மு.சவுந்தரராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாணசபைபின் பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை உள்ளிட்ட மற்றும் பாடசாலை அதிபர்கள், கலைஞர்கள் பொது மக்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது புராண, இதிகாச நாடகங்கள், கோலாட்டம், கும்பி, என்பன மேடையேற்றப்பட்டதுடன், களுமுந்தன்வெளிக் கிராமத்திலிருந்து கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 2 மாவர்களுக்கும், கல்வி, பொது தர சாதாரண பரீட்சையில் சித்தி பெற்ற 17 மாணவர்களும், பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான 04 மாணவர்களுக்கும் பரிசில்களும் ஞாபகச் சின்னங்களும், வழங்கப்பட்டன.
மேலும் இதன்போது சமூக சேலையில் ஈ:டுபட்டு வரும் 9 சமூக சேவையளர்களுக்கும். களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துமடல் வழங்கி கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment