16 Jun 2015

சாய்ந்தமருதில் ழுழுமையான ஹர்த்தால் அனுஷ்டிப்பு

SHARE

அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது பிரதேச முஸ்லிகள் தங்களுக்கு தனியான உள்ளூராட்சி சபை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முழு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் சாய்ந்தமருது பிரதேசத்தில் அனைத்து அரச நிறுவனங்கள் உட்பட சகல தனியார் மற்றும் ஏனைய நிறுவனங்களும் ழுழுமையாக மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

மேலும் பள்ளிவாசலுக்கு முன்பாக கூடியிருந்த சாய்ந்தமருது மக்களின் கைகளில் மற்றும் பள்ளிவாசல் சுவர்களிலும் "அனுமதி இல்லை அனுமதி இல்லை, எமது உள்ளுராட்சி சபையை தடுத்த அரசியல் வாதி எவருக்கும் சாய்ந்தமருது வர அனுமதி இல்லை" என்றும் "சாய்ந்தமருது மக்கள் கண்ணீர் வடிக்கிரார்கள் தன் முகவரி கேட்டு" போன்ற பதாதைகளை காணக்கூடியதாக இருந்தது.
SHARE

Author: verified_user

0 Comments: