6 Mar 2015

சிறுவர் கல்வி மற்றும் மேம்பாடு தொடர்பான சமூக நலத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு

SHARE
யுனிசப் அரச சார்பற்ற நிறுவனத்தின் இலங்கைக்கான  பிரதி வதிவிட பிரதிநிதி டாக்டர் போலா பலன்சியா தலைமையிலான தூதுக்குழு கிழக்கு மாகாண முதலமைச்ர் ஹாபீஸ் நசீர் அஹமட்டை  புதன் கிழமை (04)  திருகோணமலை முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது கிழக்கு மாகாண சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் கல்வி மற்றும் மேம்பாடு தொடர்பான சமூக நலத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதன் முன்னேற்றத்திற்கான வழிகளை அமைத்து கொடுப்பது பற்றியும் இதன்போது  கலந்த்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: