6 Mar 2015

மட்டக்களப்பு- கொக்கடிச்சோலையில் இலங்கை வங்கி புதிய கட்டிடத் திறப்புவிழா

SHARE
இதுவரை காலமும் சிறியதொரு இடத்தில் இயங்கிவந்த இலங்கை வங்கி கொக்கட்டிச்சோலை கிளை தற்போது கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் கொக்கட்டிச்சோலை கிளையின் புதிய கட்டடத் திறப்பு விழா வங்கிக் கிளை முகாமையாளர் எஸ்.அரவிந்தன் தலைமையில் புதன்கிழமை (04)  இடம்பெற்றது.

இக்கட்டடத்தினை இதனை வைபவரீதியாக இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் பிரதேச முகாமையாளர் சிந்துஜா மார்டின், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், இலங்கை வங்கி காத்தான்குடி முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இதன் போது புதிய பணவைப்புக்கள், கணக்கு புத்தகங்கள் வழங்கல், கடன் வழங்கல், நிலையான வைப்புக்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல் போன்ற சேவைகள் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது மண்முனை தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி பெர்னாண்டோ, கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர், பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர், காத்தான்குடி இலங்கை வங்கி முகாமையாளர்,  பாடசாலைகளின் அதிபர்கள் , வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: