அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர்
எம்.ரி.ஹசன் அலி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்
ஆகியோர் நேற்று (24) மதியம் விஜயம் செய்தனர்.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் விஜயம் செய்த சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி
வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்
பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார
வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர், கிழக்கு மாகாண முதலமைச்சரின்
இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பழீல், முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட
உறுப்பினர் யு.எம்.வாஹித், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச உறுப்பினர்
எம்.எல்.கலீல், கோணாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.அமீன் உட்பட
வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரினாலும் அட்டாளைச்சேனை
பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸினாலும் இராஜாங்க அமைச்சர் ஹசன்
அலிக்கு இந்நிகழ்வின்போது பொன்னாடைபோர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக்
கௌரவிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தில் முதன்மையான வைத்தியசாலையாக திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment