24 Feb 2015

தாழங்குடா விநாயகர் வித்தியாலய கட்டிடத்திறப்பு விழா

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடிக்கட்டடத் திறப்புவிழா திங்கட்கிழமை (23) பகல் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.மதிசுதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன்  வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், அதிதிகள் பாண்டு வாத்திய இசை முழங்க வரவேற்று அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றல் நடைபெற்றதை அடுத்து பிரதம அதிதிகள் நாடா வெட்டி திறந்து வைத்தனர். அதனையடுத்து கட்டடத்தினை சுற்றிப் பார்வையிட்டதுடன் பாடசாலையில் உள்ள தேவைகள், குறைபாடுகள் குறித்து அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கலந்துரையாடினர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு மாடிக்கட்டடத்தில் அதிபர் அலுவலகம், வகுப்பறைகள் என முக்கிய விடயங்களுக்கான பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


batti school


SHARE

Author: verified_user

0 Comments: