23 Jan 2015

பழைய விலையில் பெற்றோல் - காத்தான்குடியில் அமைதியின்மை

SHARE
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு சில மணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்று நள்ளிரவு முதல் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட எரிபொருள் குறைப்புக்கமைய, ஓரு லீற்றர் பெற்றோலின் விலை 117 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காத்தான்குடி - ஆரையம்பதி எல்லையில் அமைந்துள்ள இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை எரிபொருள் நிரப்பிய பலரிடம் 150 ரூபாய் (பழைய விலை) அறவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் அவர்கள் மீதி பணத்தை தருமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தினர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெதர தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட பெற்றோல் நிலையத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: