8 Jan 2015

வெற்றி யாருக்கு? ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று

SHARE
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இடம்பெறவுள்ளன.

இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் டிசம்பர் 8ம் திகதி முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட 17 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பொது எதிரணி வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணி சார்பில் மைத்திரிபால சிறிசேனவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றைய தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: