15 Dec 2014

கல்கந்த வீதிக்கான புனரமைப்பு பணி

SHARE
அம்பாறை மாவட்டத்தில் ஆதிவாசிகளின் கிராமமான தெஹ்யத்தகண்டி கிராமத்துக்குரிய கல்கந்த வீதிக்கான புனரமைப்பு பணி  ஞாயிற்றுக்கிழமை (14) உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இவ்வீதி கிரவல்  வீதியாக அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர். எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: