15 Dec 2014

வாழ்வாதார உபகரணங்கள்

SHARE
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட திவிநெகும பயனாளிகள் 70 பேருக்கு வாழ்வாதார உபகரணங்கள்  ஞாயிற்றுக்கிழமை (14) வழங்கிவைக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ரூபா 40 இலட்சம் ரூபாய்  நிதியொதுக்கீட்டில் திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரதேச திவிநெகும உத்தியோகஸ்தர் எம்.எம்.தஸ்லிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  கிழக்கு
மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: