திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பதவிசிறிபுர
பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்
இருவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு
ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொது எதிரணியில் இணைந்துகொண்டனர்.
திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடைபெற்றது. இதன்போது, பதவிசிறிபுர பிரதேச சபையின் உப தலைவர் மானெல் கருணநாயக்க மற்றும் சபை உறுப்பினர் எச்.பி.தர்மகீர்த்தி ஆகிய இருவரும் பொது எதிரணியில் இணைந்துகொண்டனர்.
'நாங்கள் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய விரும்பினோம் ஆனால், எதனையும் செய்ய எங்களுக்கு மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில், எமது கோரிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்ற நம்பிக்கையில் பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளிக்க நாம் இருவரும் முன்வந்துள்ளோம். எமது முடிவு உறுதியானது.' என இவர்கள் இருவரும் கூறினர்.
திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடைபெற்றது. இதன்போது, பதவிசிறிபுர பிரதேச சபையின் உப தலைவர் மானெல் கருணநாயக்க மற்றும் சபை உறுப்பினர் எச்.பி.தர்மகீர்த்தி ஆகிய இருவரும் பொது எதிரணியில் இணைந்துகொண்டனர்.
'நாங்கள் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய விரும்பினோம் ஆனால், எதனையும் செய்ய எங்களுக்கு மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில், எமது கோரிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்ற நம்பிக்கையில் பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளிக்க நாம் இருவரும் முன்வந்துள்ளோம். எமது முடிவு உறுதியானது.' என இவர்கள் இருவரும் கூறினர்.
0 Comments:
Post a Comment