26 Dec 2014

நலம்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு சுகாதாரப் பொதி வழங்கி வைப்பு

SHARE
வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டு நலம்புரி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் சுகாதார நலனைப் பேனும் முகமாக இலங்கைச் சஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் சுகாதாரப் பொதிகள் இன்று வெள்ளிக் கிழமை(26) வழங்கப்பட்டதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கதின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட மட்.பெரியபோரதீவு பாரதிவித்தியாலயம், மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியுள்ள மொத்தம் 125 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா ஒவ்வொரு பொதி வீதம் வழங்கப் பட்டுள்ளன.
 
அந்த சுகாதாரப் பொதியில் சவர்க்காரம், சிக்னல், விறஸ், துவாய், பெண்களுக்கான சுகாதார உடை, போன்றன அடங்கியுள்ளன.

இந்நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மலசல கூடங்களைச் சுத்திகரிப்பதற்காக 20 மலசல கூடங்களைச் சுத்தம் செய்யக் கூடிய சுத்திகரிப்பு உபகரணங்களும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகஸ்த்தரிடம் இன்று ஒப்படக்கப்பட்டதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கதின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா மேலும் கூறினார்.





























SHARE

Author: verified_user

0 Comments: