3 Dec 2014

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி

SHARE
 மட்.கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த  ஜெ.தனேஸ்காந் மற்றும் ந.அபிஷேக் ஆகிய இரு மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டி வழங்கும் நேற்று திங்கட் கிழமை (01) வித்தியாலயத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் திருமதி.எஸ்.அருட்சோதி தலமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (ஆரம்பப் பிரிவு) க.சச்சிதானந்தம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.
இதன்போது ஏனைய மாணவர்கள். அசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: