3 Dec 2014

மட்.களுதாவளை மகாவித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு கௌரவம்.

SHARE
 மட்.களுதாவளை மகாவித்தியாலய அபிவிருத்திக் குழுவினால் அவ்வித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டத்தில் 2013 ஆம், 2014 ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கான சாதனையாளர் பாராட்டு விழா நேற்று திங்கட் கிழமை (01)  மட்.களுதாவளை மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் வித்தியால அதிபர் சி.அலேசியஸ் தலைமையில் நடைபெற்றது.


இதன்போது கல்வி அமைச்சினால் 2013 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய மட்ட நடனப் போட்டியில் முதலாம் இடம்பெற்ற ம.அமிர்தநிலா, ச.சீனுதா, சா.திலக்ஷா, மோ.நிலக்ஷனா, கு.டிவேனிகா, இ.மிருணா, ச.ஜோனிஷ்கா, ஜெ.சஸ்வரினா, தே.கஜாளினி, த.கவிதாரணி, ஆகியோரும்,

2013 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடம்பெற்ற வி.பிரதீஸ்குமார், 

2013 ஆம் ஆண்டு தேசிய மட்ட சித்திரப் போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற தெ.திவாகர்,

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மெய் வல்லுனர் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் முதலிடம் பெற்ற பே.வேணுஜன்,

தேசிய மட்ட தகவல் தொழில் நுட்பத்தில்  விசேட திறமை பெற்ற கு.கிதுர்ஷனன்,


2014 ஆம் ஆண்டு, அகில இலங்கை  தமிழ் தினப் போட்டியில் கவிதை ஆக்கத்தில் முதலாம் இடம்பெற்ற து.வுகாரி,


2014 ஆம் ஆண்டு அகில இலங்கை  தமிழ் தினப் போட்டியில் எழுத்தாகத்தில் மூன்றாம் இடம்பெற்ற க.ஹீப்றதா,  ஆகிய மாணவர்களுக்கு மேற்படி மட்.களுதாவளை மகாவித்தியாலய அபிவிருத்திக் குழுவினால் பாராட்டுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர்.

இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மா.உலககேஸ்பரம் கலந்து கொண்டு மாணவர்களுக்குரிய பாராட்டுச் சின்னங்கள் வழங்கி வைத்தார்.


















SHARE

Author: verified_user

0 Comments: