ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள க.மோகன் என்பவர் 06.11.2013 ஆம் திகதியில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று சனிக் கிழமை (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து கொண்டிருக்கும் அறிக்கைகளின்படி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த மோகன் கட்சி மாற்றம் என குறிப்பிடப் பட்டிருந்தது. கட்சியின் தேசிய அமைப்பாளராக ப.தவேந்திரராஜாவே இருந்து வருகின்றார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கணவனை இழந்த பெண்களுக்கும் இலவசமாக காணி தருவதாக கூறி சுமார் 7 இலட்சம் ரூபாவுக்குமேல் நாவற்குடா கல்லடி பிரதேசத்திலும் மட்டக்களப்பு நகரில் உள்ள ஏனைய பலரிடமும் பல இலட்சம் ரூபாய்களை பெற்றதாக கிடைத்த முறைப்பாடினை அடுத்து ஆராய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு ஒழுக்காற்று நடவடிக்கையின்படி மோகனை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் நீக்கியது.
சமுகம் சார்ந்த உயர் சிந்தனையுடன் செயற்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து கொண்டு தமிழ் சமுகத்திற்காக வேலை செய்வதாகக் கூறிக்கொண்டு அத்தமிழ் சமுகத்தினை ஏமாற்றி ஊழல் புரிந்த காரணத்திற்காக கட்சியின் இருந்து நீக்கப்பட்டதுடன் மக்களால் பொலிசாரிடன் முன் வைக்கப்பட்ட பல முறைப்பாடுகளும் உள்ளன.
இது போன்ற நபர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் ஒப்பிட்டு செய்தி வெளியிடுவதனை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் தமது குற்றங்களை மறைக்க கட்சிமாறும் தரங்கெட்ட அரசியல் தலைமைகளை எப்போதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
வாழ்க தமிழ் என்று கோசமிட்டு தழிழருக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இடம் பொடுக்காத மைத்திரிபாலசிறிசேனவை ஆதரிக்கப் போவதாக மோகன் குறிப்பிட்டுள்ளது எமக்கு வேதனையினைத் தருகின்றது. தமிழருக்கு குரல் கொடுப்பதாக கூறும் மோகன், தமிழக்கு குரல் கொடுப்பதாக இருந்தால் தமிழர்மீது உண்மைப் பற்றிருந்திருந்தால் இவ்வாறு தமிழனை ஒடுக்கி மாகாணசபை முறையினையே இல்லாமல் செய்யும் கூட்டத்திற்குப் பின்னால் செல்லாமல் எதுவும் செய்யாமல் தமிழர் என்று கோசமிட்டுக் கொண்டு மாந்திரமாவது இருக்கும் தமிழ் தேசியக் கூட்டடைப்புக்காவது ஆதரவு தெருவித்திருக்கலாம்.
மாறாக தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது தமிழர்களுக்க மாகாணசபை ஆட்சியே இல்லை என்று குறிப்பிடுகின்ற பேரிதவாதக்கட்சிகளான கெல உறுமைய,ஜே.வி.பி தமிழருக்கு பெரும் துரோகத்தினையும் செய்து இன்று 13வது திருத்தச் சட்ட மூலம் இளுபறிப்படுவதற்கு முழுக்காரணமாக உள்ள ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து நான்பேரினவாதி என மார்தட்டும் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பது கிழக்குத் தமிழருக்கு செய்யும் பாரிய துரோகம் என்பதனையும் கிழக்கிற்கு கிராமப்புங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு வந்த மகிந்தராஜபக்சவினையே தமிழ் மக்கள் இம்முறை ஆதரிப்பார்கள்.
எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment