14 Nov 2014

சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்தின் உண்டியில் இருந்த பணம் கொள்ளை

SHARE







மட்டக்களப்பு சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் உண்டியல் திருடப்பட்டு அதிலிருந்த பணம் அனைத்தும் எடுத்துச் செல்லப் பட்டுள்ளதாக ஏறாவ+ர்ப் பொலிஸ்; நிலையத்தில் முறையிடப் பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (14) அதிகாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வருடகாலத்திற்குள்  இந்த ஆலயத்தின் உண்டியல் திருடப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

மட்டக்களப்பு-திருகோணமலை பிரதான வீதியோரம் சனநடமாட்டமுள்ள இடத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் மின்குமிழ்கள் உடைக்கப்பட்டு பெரிய உண்டியல் எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. அதிலிருந்த பணம் கொள்ளையிடப்பட்ட பின்னர் அண்மித்த பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதியில் அந்த உண்டியல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

மாதத்திற்கொருமுறையே இந்த உண்டியலிலுள்ள பணம் கணக்கிடப்படு வதுண்டு. அந்த வகையில் இம்மாதத்திற்கான சேகரிப்பு பணம் கோயில் நிருவாகத்தினரால் எடுப்பதற்கு முன்னரே உண்டியல் திருடப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: