14 Nov 2014

இலவச குழாய் மூலமான குடிநீர் இணைப்புக்கள் வழங்கி வைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கிராமத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (14) இலவச குழாய் மூலமான குடிநீர் இணைப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் இந்நிகழ்வு களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மீள் குயேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதன், மீள் குயேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன்,  கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.காமினி, மற்றும் பொதுமகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு குடும்பத்திற்கான குழாய் மூலமான குடிநீர் இணைப்பின் பெறுமதி 22500 ரூபாய் ஆகும்.

மீள் குயேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதனின் விசேட செயற்றிட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 25000 குடும்பங்களுக்கு இவ்வாறு இலவச குழாய் மூலமான குடிநீர் இணைப்புக்கள் வழங்கவுள்ளதாகவும், அவற்றுள் முதற் கட்டமாக இன்று களுதாவளையில் 300 குடும்பங்களுக்கு இவ்விணைப்புக்கள் வழங்கப் படுவதாகவும், மீள் குயேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் இதன்போது குறிப்பிட்டார்.


SHARE

Author: verified_user

0 Comments: