14 Nov 2014

என்னை வேண்டுமென்றே தொடர்ச்சியாக பழி தீர்க்கிறார்! வலயக் கல்விப் பணிப்பாளர் மீது ஆசிரியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

SHARE


தன்னை வேண்டுமென்றே தொடர்ச்சியாக பழிதீர்ப்பதாகக் கூறி வலயக்கல்விப்பணிப்பாளர் மீது ஓர் ஆசிரியர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்தியக்கிளையில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
மண்டுர் மகா வித்தியாயலயத்தில் கற்பிக்கும் சுப்பிரமணியம் கமலேஸ்வரன் என்ற ஆசிரியரே பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்திற்கு எதிராக இம்முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமக்கு எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அசீஸ் வலயக்கல்விப்பணிப்பாளருக்கு விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

விளக்கம் கிடைத்தபிற்பாடு விசாரணை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
(காரைதீவு நிருபர்)
SHARE

Author: verified_user

0 Comments: