21 Nov 2014

மட்டக்களப்பில் வீதியோர நாடகங்கள்

SHARE
அரச சேவைகள் தொடர்பில் மக்கள்  அன்றாடம் எதிர்கொள்ளும் தேவைகள் மற்றும் சவால்கள், சிக்கல்கள் தடைகள் தாமதங்கள் தொடர்பில்   மக்களின்  மனக்குறைகளை உரிய அரச அதிகாரிகளுக்கு உரிய முறையில் உடனடியாக  முறையிடும் பழக்கத்தை ஊக்கப்படுத்துமுகமாக

நேர்மையின் புகலிடம் அமைப்பானது முனைக்காடு நாகசக்தி கலைக் கழகத்துடன் இணைந்து வீதி நாடகமொன்றை மட்டக்களப்பின் பல பாகங்களில் நடத்திவருகிறது.

அதன் ஒரு அங்கமாக நேற்று வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்ற பிரதி ஆணையாளரின் அலுவலகத்திலும் அதனை தொடர்ந்து மட்டக்களப்பு பேரூந்து நிலையத்திலும் வீதி நாடகமானது நடைபெற்றது.

நாடகத்தின் இறுதியில்இ புகார் செய்ய மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கையேடுகளும் வழங்கப்பட்டன.

SHARE

Author: verified_user

0 Comments: